search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிபம்பை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டு இருந்ததையும் அதை அகற்றும் பணி நடைபெற்று வருவதையும் படத்தில் காணலாம்.
    X
    அடிபம்பை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டு இருந்ததையும் அதை அகற்றும் பணி நடைபெற்று வருவதையும் படத்தில் காணலாம்.

    அடிபம்பை அகற்றாமல் அமைக்கப்பட்ட சாலை

    இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அடிபம்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருப்பூர் கல்லூரி சாலை 6-வது கிராஸ் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் விடுதி முன்பு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. 

    இந்தநிலையில் அங்கு பயனற்ற முறையில் அடிபம்பு ஒன்று இருந்தது. அதனை அகற்றாமல் சாலையை அமைத்துள்ளனர். இதனால் அடிபாம்பானது சாலையில் பாதியளவு புதைந்து காணப்பட்டது. இதன் மூலம் விபத்துகள் ஏற்படும் அபாயம் உண்டானது. 

    இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன், இளைஞர்கள் சிலர் அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அடிபம்பை அகற்றாமல் சாலை அமைத்தது குறித்தும் முறையிட்டு இருந்தனர்.  

    இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவவே அதனை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இன்று காலை அங்கு சென்ற அதிகாரிகள் அடிபம்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×