என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவாரூரில் போலீசாரின் பழுதான வாகனங்கள் ஏலம்
Byமாலை மலர்19 Jan 2022 10:01 AM GMT (Updated: 19 Jan 2022 10:01 AM GMT)
திருவாரூரில் பயன்பாடில்லாத காவல்துறை வாகனங்கள் ரூ.12.5 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட காவல்துறையில் காவல் பணிக்காக இயங்கிவந்த வாகனங்களில் பயன் பாடில்லாமல் கழிவினம் செய்யப்பட்ட இருசக்கர மற்றும் இலகுரக ஜீப் வாகனங்கள் என மொத்தம் 60 வாகனங்களுக்கான பொது ஏலம் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
எஸ்.பி விஜயகுமார் தலைமையில் ஏ.டி.எஸ்.பி அன்பழகன் ஏலத்தினை நடத்தினார். இதில் வாகனங்களை பொது ஏலம் எடுப்பதற்காக 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து எஸ்.பி. விஜயகுமார் கூறுகையில், திருவாரூர் மாவட்ட போலீஸ் துறையில் 10 ஆண்டு காலத்திற்கு மேல் இயங்கி வந்த இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் பயன்பாடு இல்லாமல் கழிவினம் செய்யப்பட்டு பொது ஏலத்தில் விடப்பட்டது.
அதன்படி 38 இருசக்கர வாகனங்கள், 12 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 50 வாகனங்கள் ரூ 12 லட்சத்து 54 ஆயிரத்து 390-க்கு ஏலம் விடப்பட்டது.
இந்த தொகை அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X