search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இ.எஸ்.ஐ. சார்பில் தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்திற்கு நிவாரண தொகை

    நாளொன்றுக்கு 619 ரூபாய் வீதம் மாதம் 18,570 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் முருகேசன் (வயது 44) என்பவர் சூப்பர்வைசராக பணிபுரிந்தார். இவரது மனைவி செல்வி(41). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன், தாய் உள்ளனர். 

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முருகேசன் கடந்த மே மாதம் 16&ந் தேதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இ.எஸ்.ஐ.,ல் பதிவு செய்த தொழிலாளர் என்பதால் இ.எஸ்.ஐ., கோவை சார் மண்டல துணை இயக்குனர், முருகேசனின் குடும்பத்துக்கு கொரோனா நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

    அதன்படி நாளொன்றுக்கு 619 ரூபாய் வீதம் மாதம் 18,570 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் கிளை மேலாளர் திலீப், முருகேசனின் குடும்பத்தினரிடம் நிவாரண உதவி தொகைக்கான ஆணை மற்றும் சான்றோர் உதவித் தொகை அடையாள அட்டையை வழங்கினார். 

    இறுதிச் சடங்கிற்கு ரூ.15 ஆயிரம், நிலுவைத்தொகை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 754 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
    Next Story
    ×