என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இ.எஸ்.ஐ. சார்பில் தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்திற்கு நிவாரண தொகை
Byமாலை மலர்19 Jan 2022 7:11 AM GMT (Updated: 19 Jan 2022 7:11 AM GMT)
நாளொன்றுக்கு 619 ரூபாய் வீதம் மாதம் 18,570 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் முருகேசன் (வயது 44) என்பவர் சூப்பர்வைசராக பணிபுரிந்தார். இவரது மனைவி செல்வி(41). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன், தாய் உள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முருகேசன் கடந்த மே மாதம் 16&ந் தேதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இ.எஸ்.ஐ.,ல் பதிவு செய்த தொழிலாளர் என்பதால் இ.எஸ்.ஐ., கோவை சார் மண்டல துணை இயக்குனர், முருகேசனின் குடும்பத்துக்கு கொரோனா நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி நாளொன்றுக்கு 619 ரூபாய் வீதம் மாதம் 18,570 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் கிளை மேலாளர் திலீப், முருகேசனின் குடும்பத்தினரிடம் நிவாரண உதவி தொகைக்கான ஆணை மற்றும் சான்றோர் உதவித் தொகை அடையாள அட்டையை வழங்கினார்.
இறுதிச் சடங்கிற்கு ரூ.15 ஆயிரம், நிலுவைத்தொகை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 754 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X