என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செஞ்சியில் மளிகை கடையில் பதுக்கிய குட்கா பறிமுதல்- வியாபாரி கைது
Byமாலை மலர்18 Jan 2022 10:47 AM GMT (Updated: 18 Jan 2022 10:47 AM GMT)
நாட்டார்மங்கலத்தில் உள்ள ஒரு மளிகைக்கடையில் சோதனையிட்டபோது அங்கு விற்பனைக்காக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், மணல் கடத்தல், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுவிற்பனை மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரில் ஒரு மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப் பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செஞ்சி நகரப்பகுதியில் உள்ள கடைகளை ஆய்வு செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் செஞ்சி சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் நாட்டார்மங்கலத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சோதனையிட்டபோது அங்கு விற்பனைக்காக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செஞ்சி போலீசார் மளிகை கடை உரிமையாளர் லட்சுமணன் (வயது 30) மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், மணல் கடத்தல், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுவிற்பனை மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரில் ஒரு மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப் பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செஞ்சி நகரப்பகுதியில் உள்ள கடைகளை ஆய்வு செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் செஞ்சி சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் நாட்டார்மங்கலத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சோதனையிட்டபோது அங்கு விற்பனைக்காக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செஞ்சி போலீசார் மளிகை கடை உரிமையாளர் லட்சுமணன் (வயது 30) மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X