என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம்- மேம்பாட்டுக்கான இலக்கை நிர்ணயிக்க நடவடிக்கை
Byமாலை மலர்18 Jan 2022 6:54 AM GMT (Updated: 18 Jan 2022 7:28 AM GMT)
திட்டக்குழுவின் தலைவர் என்ற முறையில் முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றார்கள்.
சென்னை:
சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள திட்டக்குழு அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாநில திட்டக் குழுவின் ஆய்வுக் கூட்டம் அதன் தலைவரான முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
மாநில திட்டக்குழு ஆய்வுக்கூட்டத்தில், துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், முழுநேர - பகுதிநேர உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழக நிதிநிலையை மேம்படுத்துவதற்கான வழி முறைகள் குறித்தும், புதிதாக எந்த மாதிரியான திட்டங்களை அறிவிக்கலாம் என்பது குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. மேலும் தமிழக மேம்பாட்டுக்கான புதிய இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர்.
திட்டக்குழுவின் தலைவர் என்ற முறையில் முதல்- அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், திட்டம் வளர்ச்சி சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம் கபூர், முழுநேர உறுப்பினர் பேராசிரியர் சீனிவாசன், உறுப்பினர் செயலர் ராஜ் சேகர், மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் தீனபந்து. டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., சித்தமருத்துவர் சிவராமன், மற்றும் நர்த்தகி நடராஜ் ஆகியோர் பங்கேற்றார்கள்.
சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள திட்டக்குழு அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாநில திட்டக் குழுவின் ஆய்வுக் கூட்டம் அதன் தலைவரான முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
மாநில திட்டக்குழு ஆய்வுக்கூட்டத்தில், துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், முழுநேர - பகுதிநேர உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழக நிதிநிலையை மேம்படுத்துவதற்கான வழி முறைகள் குறித்தும், புதிதாக எந்த மாதிரியான திட்டங்களை அறிவிக்கலாம் என்பது குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. மேலும் தமிழக மேம்பாட்டுக்கான புதிய இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர்.
ஜெயரஞ்சனை துணைத் தலைவராக கொண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு உருவாக்கப்பட்ட திட்டக்குழு 2-வது முறையாக முதல்- அமைச்சர் தலைமையில் கூடியுள்ளது
.
இதையும் படியுங்கள்... வடபழனி முருகன் கோவிலில் வருகிற 23-ந்தேதி கும்பாபிஷேகம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X