search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது

    சேலத்தில் பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி வளத்தி குமார் (வயது 50). இவர் மீது கொலை, ஆள் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் உள்ளன.

    இந்த நிலையில் இவர் நேற்று அன்னதானப்பட்டி ஆர்ச் அருகே வந்துகொண்டிருந்த தாதகாப்பட்டி தர்மலிங்கம் தெருவை சேர்ந்த பால்ராஜ் (வயது 27) என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது பற்றி  அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வளத்திகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×