என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொங்கல் பரிசு பொருட்கள் பெற முடியாமல் தவித்த பொதுமக்கள்
Byமாலை மலர்12 Jan 2022 10:36 AM GMT (Updated: 12 Jan 2022 10:36 AM GMT)
ரேசன் கடையில் காத்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் எங்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது.
அவினாசி:
அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மங்கலம் சாலையில் உள்ள ரேசன்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது இந்தநிலையில் நேற்று கடை திறக்காமல் பூட்டியிருந்ததால் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடை முன் திரண்டு நின்றனர்.
இதுகுறித்து அங்கிருந்த பெண்கள் கூறுகையில்:
பொங்கல் பரிசு பொருட்கள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் வந்தோம். ஆனால் நேற்று முன்தினம் கடை திறக்கவில்லை. எனவே நேற்று மீண்டும் வந்தோம். அப்போதும் கடை பூட்டப்பட்டிருந்தது.
2 நாட்களாக ரேசன்கடையில் காத்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் எங்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது. துறை அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சம்பந்தப்பட்ட ரேசன்கடை பொருள் விற்பனையாளர்கள் கூறுகையில்:
கடை ஊழியர்கள் அனைவரும் வேர்ஹவுஸ் குடோனில் பொங்கல் பரிசு பொருட்கள் விடுபடாமல் அனைத்து பொருட்களும் சரிபார்த்து எடுத்துவரும் பணிகள் மேற்கொண்டதால் காலதாமதம் ஏற்பட்டது. இன்று வழக்கம்போல் அனைவருக்கும் விடுதல் இன்றி பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X