search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பொங்கல் தொகுப்பில் பல்லி என புகார்: தந்தை மீது வழக்கு போட்டதால் மகன் தீக்குளித்து தற்கொலை

    திருத்தணியில் தந்தை மீது வழக்கு போட்டதால் மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணியைச் சேர்ந்தவர் நந்தன். அ.தி.மு.க. பிரமுகர். இவரது மகன் குப்புசாமி (வயது36). சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையையொட்டி அரசால் வழங்கப்படும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை அருகில் உள்ள ரேசன் கடையில் நந்தன் வாங்கினார்.

    அப்போது தொகுப்பில் இருந்த புளியில் பல்லி ஒன்று இறந்து இருப்பதாக ரேசன் கடை ஊழியரிடம் தெரிவித்தார். மேலும் இதனை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே ரேசன் கடையில் வாங்கிய புளியில் பல்லி இறந்து இருப்பதாக கூறிய நந்தன் மீது ரேசன் கடை ஊழியர் சரவணன் என்பவர் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் நந்தன் மீது ஜாமீனில் வரமுடியாதபடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனால் அவரது குடும்பத்தினர் கடும் மனவேதனை அடைந்தனர்.

    இதுபற்றி நந்தனின் மகன் குப்புசாமி அக்கம் பக்கத்தினரிடம் எனது தந்தை மீது பொய் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விட்டனர்” என்று புலம்வி வந்தார். அவரை உறவினர்கள் சமாதானம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த குப்புசாமி திடீரென தனது உடலில் தீ வைத்துக் கொண்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து உடல் கருகிய குப்புசாமியை மீட்பு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே இன்று காலை சிகிச்சை பலனின்றி குப்புசாமி பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குப்புசாமி தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×