search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    ராமநாதபுரத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

    ராமநாதபுரம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் வல்லபை நகரை சேர்ந்தவர் விஜி. இவரது மனைவி சுகன்யா (வயது 25).  விஜி வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். 

    நேற்று இரவு வீட்டு கதவை மூடுவதற்காக சுகன்யா சென்றார். அதற்கு முன்பு வாசலில் இருந்த மின் விளக்கை அணைத்துவிட்டு அவர் வீட்டுக்குள் வந்தார். அப்போது  ஒரு வாலிபர் நைசாக சுகன்யாவுக்கு தெரியாமல் வீட்டுக்குள் புகுந்தார்.  திடீரென வாலிபர் வீட்டுக்குள் நிற் பதை கண்டு  அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் சுதாரிப்பதற்குள் அந்த வாலிபர் சுகன்யா கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு வெளியே ஓடி னார். 

    இதனை கண்டு பதறிய  சுகன்யா திருடன்... திருடன்... என கத்தினார். அப்போது அந்த வாலிபர் தாலியை மட்டும் வீட்டு வாசலில் வீசிவிட்டு 9 பவுன் சங்கிலியுடன் மின்னல் வேகத்தில் இருளில் மறைந்துவிட்டான்.

    இதுகுறித்து கேணிக்கரை போலீசில் சுகன்யா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    Next Story
    ×