search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snatching"

    • வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்த திவ்யா நர்சிங் பயிற்சி பள்ளியில் பயிற்சிக்கு சென்று வருகிறார்.
    • மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரது மொபட்டை வழிமறித்து திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்து சென்றனர்.

    நெல்லை:

    வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் ரூபசேகர். இவரது மனைவி திவ்யா (வயது31). இவர் வள்ளியூரில் உள்ள நர்சிங் பயிற்சி பள்ளியில் பயிற்சிக்கு சென்று வருகிறார்.

    இதற்காக அவர் வீட்டில் இருந்து தனது மொபட்டில் வள்ளியூர் சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பினார். அவர் வள்ளியூர்-சவுந்திரபாண்டியபுரம் பகுதியில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரது மொபட்டை வழிமறித்து திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக அவர் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோன்ஸ் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • செயின் பறித்ததாக கொடுத்த புகாரின்பேரில் வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
    • இவ்வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் தமிழரசி (42) இவர் கடந்த மார்ச் மாதம் நத்தம்- மதுரை சாலையில் உள்ள நல்லாகுளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த ஹரிதர்சன் (26) என்பவர் 6 பவுன் தங்க செயினை பறித்து சென்றார்.

    இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசில் தமிழரசி புகார் செய்தார். அதன் பேரில் நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து ஹரிதர்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரணை செய்து வந்தார். இந்நிலை யில் இந்த வழக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி உதயசூரியா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஹரிதர்சனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளி த்தார்.

    • நகையை பறித்துக்கொண்டு 2 பேரும் தப்பியோடினர்.
    • இது தொடர்பாக பூபதி என்கிற பிரபாகரன் என்பவரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரகு (36). இவர் மேட்டூர் ரோட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

    அப்போது 2 பேரும் திடீரென்று வியாபாரி ரகுவிடம் வாய்த்தகராறு செய்ததோடு தாக்குதலில் ஈடுபட்டனர்.

    அப்போது ரகுவின் கழுத்தில் இருந்த 6 அரை பவுன் நகையை பறித்துக்கொண்டு 2 பேரும் தப்பியோடினர்.

    இதையடுத்து பின்னால் மற்றொரு வாகனத்தில் ரகு துரத்தி சென்றதையடுத்து மோட்டார் சைக்கிளை அந்த கும்பல் அப்படியே விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.

    இது தொடர்பாக ரகு கொடுத்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ஈரோடு பழைய கரூர் ரோடு, கோணவாய்க்கால், பாலதண்டாயுதம் வீதியை சேர்ந்த பூபதி என்கிற பிரபாகரன் (30) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சுரேஷ் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

    • தங்கம்மாள் நேற்று முன்தினம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலுக்கு சென்றார்.
    • பூஜை முடிந்தபின்னர் தங்கம்மாள் வெளியே வந்து தனது கழுத்தில் கிடந்த 4 பவுன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி தங்கம்மாள்(வயது 70).

    இவர் நேற்று முன்தினம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலுக்கு சென்றார். அங்கு நடந்த கோபூஜையில் பங்கேற்றபோது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. பூஜை முடிந்தபின்னர் தங்கம்மாள் வெளியே வந்து தனது கழுத்தில் கிடந்த 4 பவுன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுதொடர்பாக அவர் தாழையூத்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமுதா நேற்று இரவு பக்கத்து வீட்டு பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அமுதாவிடம் பேச்சுகொடுப்பது போல் வந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கே.டி.சி.நகரை அடுத்த ஆர்.எஸ்.பி.ஆர். தெருவை சேர்ந்தவர் முருகன். ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர். இவரது மனைவி அமுதா (வயது 55). இவர் நேற்று இரவு பக்கத்து வீட்டு பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

    13 பவுன் நகை

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அமுதாவிடம் பேச்சுகொடுப்பது போல் வந்தனர். திடீரென அவர்கள் அமுதா கழுத்தில் இருந்த 13 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா கத்தி கூச்சலிட்டார். அப்பகுதியினர் விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் இரவு நேரம் என்பதால் அவர்கள் தப்பிசென்றனர். கொள்ளை போன நகை மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதுதொடர்பாக அமுதா சிப்காட் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • 15 பவுன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்
    • வடமாநில வாலிபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    சிவகிரி:

    சிவகிரியில் உள்ள திரவுபதி அம்மன்கோவிலில் நேற்று பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி இல்லத்து பிள்ளைமார் தெருவை சேர்ந்த சரோஜா(வயது 48) என்ற பெண்ணிடம் இருந்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இதேபோல் சிவகிரி குமாரபுரம் மேலத்தெருவை சேர்ந்த பாஞ்சாலி(45) என்பவரிடம் 5 பவுன், வாசுதேவநல்லூரை சேர்ந்த சுந்தரி(65) என்பவரிடம் 2 பவுன், சிவகிரி மலைகோவில் ரோட்டை சேர்ந்த பாஞ்சாலி(25) என்பவரிடம் 3 பவுன் என மொத்தம் 15 பவுன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இதுதொடர்பாக அவர்கள் சிவகிரி போலீசில் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கோவிலுக்கு வந்திருந்த வடமாநில வாலிபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவன் ஒருவன் வெங்கட் அம்மாள் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார்.
    • மோட்டார் சைக்கிளை காணவில்லை என போலீசில் புகார் செய்ய வந்த போது சிக்கினார்

    நெல்லை:

    சுத்தமல்லியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி வெங்கட்அம்மாள். நேற்று மாலை கணவன், மனைவி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சுத்தமல்லியில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் பேட்டை ரெயில்வே கேட் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவன் ஒருவன் வெங்கட் அம்மாள் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார்.

    அவர் செயினை இறுக்கமாக பிடித்து கொண்டதால் நிலைதடுமாறி 2 மோட்டார் சைக்கிள்களும் கீழே விழுந்தது. அப்போது தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

    இது தொடர்பாக அவர்கள் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில்சுத்தமல்லியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை என பேட்டை போலீசில் புகார் செய்ய வந்தார்.

    விசாரணையில் அவன்தான் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்தனர்.

    ×