என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் குமரன் நினைவு நாள் நிகழ்ச்சி
Byமாலை மலர்11 Jan 2022 9:59 AM GMT (Updated: 11 Jan 2022 9:59 AM GMT)
திருப்பூர் குமரனின் நினைவு ஸ்தூபி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூர்:
சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 90ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பூர் ரெயில் நிலையம் எதிரில் குமரன் நினைவகத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிவசேனா கட்சி இளைஞரணி மாநில தலைவர் திருமுருகதினேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர் பிரகாஷ், மாநகர் மாவட்ட செயலாளர் தங்கவேலு, வடக்கு மாநகர செயலாளர் முருகேஷ், நிர்வாகிகள் லோகநாதன், சஞ்சீவ் மற்றும் சிவசேனா மாவட்ட நகர, ஒன்றிய இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் திருப்பூர் குமரன் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் திருப்பூர் குமரனின் நினைவு ஸ்தூபி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதே போல் பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X