search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவர்கள்
    X
    மீனவர்கள்

    கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

    முழு ஊரடங்கு காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர்.
    ராமேசுவரம்

    இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர். 

    மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றன.

    தொடர்ந்து நடைபெற்ற  பேச்சுவார்த்தைக்கு பின்னர் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு மீன் பிடிக்க சென்றனர்.  கடந்த சனிக்கிழமை அவர்கள் 2-வது முறை கடலுக்கு செல்ல வேண்டும். 

    ஆனால்  மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் மீன்களை வாங்க வியாபாரி கள் வரமுடியாத நிலை நிலவியது.  இதனால் மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 

    இதனையடுத்து இன்று வழக்கம்போல் ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க காலையில் சென்றனர்.

    ஏறத்தாழ 900-க்கும் மேற்பட்ட படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி உபகரணங்களை சேகரித்துக்கொண்டு  புறப்பட்டனர்.

    அவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி சீட்டை பெற்றுக் கொண்டு  மீன்பிடிக்க  சென்றனர்.
    Next Story
    ×