என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடியில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Byமாலை மலர்1 Jan 2022 10:59 AM GMT (Updated: 1 Jan 2022 10:59 AM GMT)
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை மற்றும் மணல் திருட்டு வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி:
ஆத்தூர் அருகே புன்னக்காயல் பகுதியை சேர்ந்த ஜேசுராஜ் (வயது 38) என்பவர் கடந்த 4-ந்தேதி கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார்.
இதே போல ஸ்ரீவைகுண்டம் அருகே குலசேகரநத்தம் பகுதியைச் சேர்ந்த பச்சைபெருமாள் (29) என்பவரையும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (29) என்பவர் கடந்த 10-ந்தேதி மணல் திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர். கைதான ஜேசுராஜ், பச்சை பெருமாள், ரமேஷ் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க இன்ஸ்பெக்டர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அளித்த பரிந்துரையை ஏற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 3 பேரும் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X