என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூரில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
Byமாலை மலர்1 Jan 2022 10:28 AM GMT (Updated: 1 Jan 2022 10:36 AM GMT)
பொதுமக்கள் திருப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கும், அனுப்பர்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் அங்கேரிபாளையம் அண்ணா காலனியை சேர்ந்தவர் ஆதிப் பாஷா. இவரது மகன் சல்மான் அகமது ( வயது 15). 10-ம்வகுப்பு மாணவன். இவன் நேற்று தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றான்.
சல்மான் அகமதுக்கு நீச்சல் தெரியாததால் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கினான். உடனே அவனுடன் குளிக்க சென்ற நண்பர்கள் அவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. உடனே அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் திருப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கும், அ னுப்பர்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் விரைந்து சென்று சல்மான் அகமதுவை தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அங்கு விளக்கு பொருத்தி தேடும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தீயணைப்பு படை வீரர்கள் இன்று அதிகாலை முதல் மீண்டும் கிணற்றில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் சல்மான் அகமதுவை கிணற்றிலிருந்து பிணமாக மீட்டனர். அனுப்பர்பாளையம் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X