search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தமிழகத்தில் மேலும் 890 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் 608 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,05,261 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 890 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 46 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது. 

    சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 294 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 397 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 73 பேருக்கும், செங்கல்பட்டில் 103 பேருக்கும், திருவள்ளூரில் 35 பேருக்கும்,  திருப்பூரில் 28 நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

    இன்று ஒரே நாளில் 608 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 3 ஆயிரத்து 196 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,765 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 6,929 ஆக உள்ளது. 
    Next Story
    ×