என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி- சேலம் அ.தி.மு.க. பிரமுகர் மீது 2 பிரிவுகளில் வழக்கு
Byமாலை மலர்30 Dec 2021 10:20 AM GMT (Updated: 30 Dec 2021 10:20 AM GMT)
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அ.தி.மு.க. பிரமுகர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). இவர் 2014-ம் ஆண்டு தனது மகனுக்கு கூட்டுறவு பருத்தி சொசைட்டியில் வேலை வாங்கி தருமாறு சேலத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அரியானூர் பழனிச்சாமி என்பவரை அணுகினார்.
அதற்கு அவர் வேலை வாங்கி கொடுப்பதற்காக ரூ.6 லட்சம் பணம் கேட்டுள்ளார். அதன்படி வெங்கடேசன் பணம் கொடுத்தார். ரூ.6 லட்சத்தை பெற்றுக்கொண்ட அரியானூர் பழனிசாமி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் வெங்கடேசன் பணத்தை திருப்பி கேட்டார்.
அதற்கு அவர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி வெங்கடேசன் சேலம் மாவட்ட கலெக்டர் காரமேகத்திடம் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்த சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் அரியானூர் பழனிசாமி மீது 420 (மோசடி செய்தல்), 506(2) கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). இவர் 2014-ம் ஆண்டு தனது மகனுக்கு கூட்டுறவு பருத்தி சொசைட்டியில் வேலை வாங்கி தருமாறு சேலத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அரியானூர் பழனிச்சாமி என்பவரை அணுகினார்.
அதற்கு அவர் வேலை வாங்கி கொடுப்பதற்காக ரூ.6 லட்சம் பணம் கேட்டுள்ளார். அதன்படி வெங்கடேசன் பணம் கொடுத்தார். ரூ.6 லட்சத்தை பெற்றுக்கொண்ட அரியானூர் பழனிசாமி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் வெங்கடேசன் பணத்தை திருப்பி கேட்டார்.
அதற்கு அவர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி வெங்கடேசன் சேலம் மாவட்ட கலெக்டர் காரமேகத்திடம் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்த சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் அரியானூர் பழனிசாமி மீது 420 (மோசடி செய்தல்), 506(2) கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X