search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    சென்னையில் மட்டும் 294... தமிழகத்தில் ஒரே நாளில் 739 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் 614 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,03,897 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 739 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 46 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 

    சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 194 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 294 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 78 பேருக்கும், செங்கல்பட்டில் 64 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லை. அரியலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    இன்று ஒரே நாளில் 614 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 2 ஆயிரத்து 588 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,758 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 6,654 ஆக உள்ளது. 
    Next Story
    ×