search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஜய் வசந்த்
    X
    விஜய் வசந்த்

    கண்காணிப்பு குழு கூட்டத்தில் பங்கேற்ற விஜய் வசந்த்

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கண்காணிப்பு குழு தலைவர் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் துணைத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கண்காணிப்பு குழு தலைவர் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் துணைத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி நகராட்சி வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு வாயிலாக குளங்கள் ஆறுகள், அணைகளை ஆகியவற்றை சீரமைப்பது குறித்து விரைவில் முடிக்க வேண்டும். பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் கட்டிட பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் ராஜேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×