என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வடமதுரை அருகே லாரி மீது பைக் மோதி மில் தொழிலாளி பலி
Byமாலை மலர்28 Dec 2021 11:21 AM GMT (Updated: 28 Dec 2021 11:21 AM GMT)
வடமதுரை அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் மில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள மோர்பட்டியைச் சேர்ந்த பாலகுமார் மகன் குணசேகரன் (வயது 26). இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேல்வார்கோட்டை பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். லாரியின் அடியில் அவருடைய உடல் சிக்கியது. லாரி அங்கு நிற்காமல் சென்றதால் அருகில் இருந்தவர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் லாரியை சுமார் 5 கி.மீ தூரம் சென்று நெடுஞ்சாலை ரோந்து போலீசார், சுங்க சாவடி ஊழியர்களுடன் மடக்கி பிடித்தனர். அதன் பின்னர் குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து லாரி டிரைவரான தீபக் பட்டேல் என்பவர் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை அருகே உள்ள மோர்பட்டியைச் சேர்ந்த பாலகுமார் மகன் குணசேகரன் (வயது 26). இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேல்வார்கோட்டை பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். லாரியின் அடியில் அவருடைய உடல் சிக்கியது. லாரி அங்கு நிற்காமல் சென்றதால் அருகில் இருந்தவர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் லாரியை சுமார் 5 கி.மீ தூரம் சென்று நெடுஞ்சாலை ரோந்து போலீசார், சுங்க சாவடி ஊழியர்களுடன் மடக்கி பிடித்தனர். அதன் பின்னர் குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து லாரி டிரைவரான தீபக் பட்டேல் என்பவர் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X