search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை... மத்திய மந்திரியிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

    மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    சென்னை:

    வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது, இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக முதலமைச்சரிடம் மத்திய மந்திரி உறுதி அளித்துள்ளார்.
    Next Story
    ×