என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தண்ணீர் தொட்டியில் கொசுபுழுக்கள் : தனியார் அலுவலகத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
Byமாலை மலர்1 Dec 2021 10:09 PM GMT (Updated: 1 Dec 2021 10:09 PM GMT)
மாநகராட்சி வடக்கு மண்டலம் 42-வது வார்டு சின்னவேடம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்படும் தனியார் அலுவலக தண்ணீர் தொட்டியில் அதிக அளவில் கொசுப்புழுக்கள் இருந்தன.
கோவை:
கோவை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு களப்பணியாளர்கள் மூலம் வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வீடுகள், நிறுவனங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை என்பதால் தேவையற்ற பிளாஸ்டிக் டப்பாக்கள், பூச்செடிகளில் தேங்கிய நீரை அப்புறப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மாநகராட்சி வடக்கு மண்டலம் 42-வது வார்டு சின்னவேடம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்படும் தனியார் அலுவலக தண்ணீர் தொட்டியில் அதிக அளவில் லார்வா கொசுப்புழுக்கள் இருந்தன. அங்கு ஆய்வு செய்து, அந்த அலுவலகத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X