search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவர்கள்
    X
    பள்ளி மாணவர்கள்

    கனமழை எதிரொலி: தமிழகத்தில் 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், என்றும் இல்லாத அளவில் இந்த ஆண்டு மழை பதிவாகி உள்ளது.

    மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சேலம், அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    இதையும் படியுங்கள்..  நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
    Next Story
    ×