search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடர வாய்ப்பு

    வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    சென்னை:

    வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    வளிமண்டல மேலடுக்ககு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகாத நிலையிலும் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    சென்னையை பொருத்தவரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 

    மழை

    இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், நெல்லை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்திலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×