search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பள்ளிபாளையத்தில் கடன் தொல்லையால் முட்டை வியாபாரி தற்கொலை

    பள்ளிபாளையத்தில் கடன் தொல்லையால் முட்டை வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38). முட்டை வியாபாரி. இவருடைய மனைவி ரேவதி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். லோகநாதன் கரூரில் முட்டை வியாபாரம் செய்து வந்தபோது, அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் பள்ளிபாளையம் பகுதியில் வியாபாரம் செய்து வந்தார். இதிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு கடன் தொல்லை இருந்ததாகவும் தெரிகிறது.

    இந்தநிலையில் அவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த அவருடைய மனைவி ரேவதி கணவர் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×