என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிபாளையத்தில் கடன் தொல்லையால் முட்டை வியாபாரி தற்கொலை
Byமாலை மலர்27 Nov 2021 6:40 AM GMT (Updated: 27 Nov 2021 6:40 AM GMT)
பள்ளிபாளையத்தில் கடன் தொல்லையால் முட்டை வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38). முட்டை வியாபாரி. இவருடைய மனைவி ரேவதி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். லோகநாதன் கரூரில் முட்டை வியாபாரம் செய்து வந்தபோது, அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் பள்ளிபாளையம் பகுதியில் வியாபாரம் செய்து வந்தார். இதிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு கடன் தொல்லை இருந்ததாகவும் தெரிகிறது.
இந்தநிலையில் அவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த அவருடைய மனைவி ரேவதி கணவர் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X