என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் நாளை தொடக்கம்: மாநகராட்சி 100 வார்டுகளுக்கு அ.தி.மு.க.வில் விருப்ப மனு விநியோகம்
Byமாலை மலர்25 Nov 2021 11:20 AM GMT (Updated: 25 Nov 2021 11:20 AM GMT)
நாளை முதல் அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆணைக்கிணங்க மதுரை மாநகராட்சி தேர்தலில் 72 வார்டுகள் மற்றும் பேரவை பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் இருந்து விருப்ப மனு பெறப்படுகிறது.
இதற்காக நாளை (26-ந் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் விருப்பமனு விநியோகம் தொடங்குகிறது.
வருகிற 28-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் உட்பட்ட மதுரை மாநகராட்சி 29 வார்டுகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 28-ந் தேதி மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சட்ட மன்ற அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
எனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கழக நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்ப மனுஅளிக்க கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆணைக்கிணங்க மதுரை மாநகராட்சி தேர்தலில் 72 வார்டுகள் மற்றும் பேரவை பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் இருந்து விருப்ப மனு பெறப்படுகிறது.
இதற்காக நாளை (26-ந் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் விருப்பமனு விநியோகம் தொடங்குகிறது.
வருகிற 28-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் உட்பட்ட மதுரை மாநகராட்சி 29 வார்டுகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 28-ந் தேதி மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சட்ட மன்ற அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
எனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கழக நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்ப மனுஅளிக்க கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X