search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பள்ளிபாளையத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

    பள்ளிபாளையத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் வெடியரசம்பாளையத்தை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 85). இவருடைய கணவர் அண்ணாமலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மூதாட்டி சகுந்தலா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மூதாட்டி கடந்த 15-ந் தேதி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மூதாட்டி சகுந்தலா நேற்று இறந்தார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×