search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தர்மபுரி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

    தர்மபுரி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாலக்கோடு:

    சேலம் மாவட்டம் ஓமலூர் முத்தையன் கரடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகன் சுப்பிரமணி (வயது 30). இவர் செல்போன் டவரில் பணியாற்றி வந்தார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை சேர்ந்த பிரியங்கா (19) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி சுப்பிரமணி தனது மனைவியுடன் மாமனார் வீட்டுக்கு வந்து இருந்தார். அங்கு அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதையடுத்து மாமனார் குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×