என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை- மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
Byமாலை மலர்28 Oct 2021 8:16 AM GMT (Updated: 28 Oct 2021 8:16 AM GMT)
மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி பாதுகாக்க வேண்டுமென மீனவர்களுக்கு மீன்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் ஆழ்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.
இதனை தொடர்ந்து மன்னார் வளைகுடா பாக் ஜலசந்தி கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் ராமேசுவரம் மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் உள்பட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் தமிழக அரசு உத்தரவின்படி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் அனுமதி சீட்டு வழங்காமல் மீன்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டனர். மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி பாதுகாக்க வேண்டுமென மீனவர்களுக்கு மீன்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதையடுத்து 1500-க்கும் மேற்பட்ட விசை படகுகளிலும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏறத்தாழ 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடந்த 4 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் ஆழ்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.
இதனை தொடர்ந்து மன்னார் வளைகுடா பாக் ஜலசந்தி கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் ராமேசுவரம் மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் உள்பட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் தமிழக அரசு உத்தரவின்படி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் அனுமதி சீட்டு வழங்காமல் மீன்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டனர். மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி பாதுகாக்க வேண்டுமென மீனவர்களுக்கு மீன்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதையடுத்து 1500-க்கும் மேற்பட்ட விசை படகுகளிலும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏறத்தாழ 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடந்த 4 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X