என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளிக்க நீடிக்கும் தடையால் திற்பரப்பு அருவியை ஏக்கத்துடன் பார்த்து திரும்பும் சுற்றுலா பயணிகள்
Byமாலை மலர்27 Oct 2021 12:13 PM GMT (Updated: 27 Oct 2021 12:13 PM GMT)
திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் தற்காலிக வேலி வழியாக அருவியை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு திரும்புகிறார்கள்.
திருவட்டார்:
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்கு அருவிப்பகுதியில் நீச்சல்குளம், சிறுவர் பூங்கா, படகு சவாரி என ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. மேலும் அருவியின் அருகே 12 சிவாலயங்களில் ஒன்றான திற்பரப்பு மகாதேவர் கோவில் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அருவியின் அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளத்தையொட்டி இருந்த இரும்பு கிரில் கைப்பிடி முழுமையாக வளைந்துள்ளது. மேலும் கல்மண்டபம் எதிரில் உள்ள பாதையில் கற்கள் பெயர்ந்துள்ளது. இதனால் கல்மண்டபத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திற்பரப்பு அருவியில் 6 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அருவிக்கு செல்லும் பாதையில் கம்பு மற்றும் கம்பியால் தற்காலிக வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், திற்பரப்புக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியின் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தடுப்புவேலியின் அருகில் நின்று அருவியின் அழகை ரசித்து விட்டு குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப செல்கிறார்கள்.
அதேவேளை அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், அருவியின் மேல்பகுதியிலும், கீழ்பகுதியிலும் ஓடும் கோதையாற்றில் குளிப்பதற்கு எந்தவித தடையும் இல்லை. இதனால், அருவியில் குளிக்க முடியாத சுற்றுலா பயணிகள் ஆற்றிலும், தடுப்பணையிலும் குளித்து விட்டு திரும்புகின்றனர்.
குமரி மாவட்டத்தில் பிற சுற்றுலாதலங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், திற்பரப்பு அருவியிலும் குளிப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X