search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதி ஓட்டம்
    X
    கைதி ஓட்டம்

    மதுரை மாவட்ட கோர்ட்டில் கைதி தப்பி ஓட்டம்

    மதுரை மாவட்ட கோர்ட்டில் இருந்து தப்பி ஓடிய கைதியை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்ட கோர்ட்டில் இன்று பாலமுருகன் (வயது 25) என்ற கைதியை போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின் கைதியுடன் போலீசார் கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்திருந்தனர்.

    அப்போது கைதி பாலமுருகன் போலீசாரின் கண்காணிப்பை மீறி அங்கிருந்து நைசாக தப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு போலீசார் கைதியை சுற்று வட்டார பகுதிகளில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

    இது குறித்து மதுரை சப் கோர்ட்டு அலுவலர் கிருஷ்ணவேணி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர்.


    Next Story
    ×