என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கைதி ஓட்டம்
நீங்கள் தேடியது "கைதி ஓட்டம்"
பண்ருட்டி அருகே போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதியை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கு தொடர்பாக மேல் அருங்குணத்தை சேர்ந்த நரி என்ற சிவபிரதாபன் (வயது 22), விமல் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதியாக வைத்திருந்தனர்.
இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் போலீஸ் காரர் பார்த்திபன் மட்டும் பணியில் இருந்தார். மற்ற போலீசார் ரோந்து சென்று விட்டனர். விசாரணை கைதியாக இருந்த சிவபிரதாபன் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்று வருவதாக பணியில் இருந்த போலீஸ்காரர் பார்த்திபனிடம் தெரிவித்தார்.
அதற்கு அவர் ரோந்து சென்ற போலீசார் திரும்பி வந்தவுடன் உன்னை அனுப்புகிறேன் என்று கூறினார். அப்போது சிவபிரதாபன் பணியில் இருந்த போலீஸ்காரர் பார்த்திபனை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓடினார். உடனே போலீஸ்காரர் பார்த்திபன் விரட்டிசென்று சிவபிரதாபனை பிடிக்க முயன்றார். ஆனால் சிவபிரதாபன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ரோந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய சிவபிரதாபனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதியை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கு தொடர்பாக மேல் அருங்குணத்தை சேர்ந்த நரி என்ற சிவபிரதாபன் (வயது 22), விமல் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதியாக வைத்திருந்தனர்.
இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் போலீஸ் காரர் பார்த்திபன் மட்டும் பணியில் இருந்தார். மற்ற போலீசார் ரோந்து சென்று விட்டனர். விசாரணை கைதியாக இருந்த சிவபிரதாபன் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்று வருவதாக பணியில் இருந்த போலீஸ்காரர் பார்த்திபனிடம் தெரிவித்தார்.
அதற்கு அவர் ரோந்து சென்ற போலீசார் திரும்பி வந்தவுடன் உன்னை அனுப்புகிறேன் என்று கூறினார். அப்போது சிவபிரதாபன் பணியில் இருந்த போலீஸ்காரர் பார்த்திபனை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓடினார். உடனே போலீஸ்காரர் பார்த்திபன் விரட்டிசென்று சிவபிரதாபனை பிடிக்க முயன்றார். ஆனால் சிவபிரதாபன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ரோந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய சிவபிரதாபனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதியை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X