search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    க.பரமத்தி அருகே மின்சாரம் பாய்ந்து ஓட்டல் ஊழியர் பலி

    க.பரமத்தி அருகே மின்சாரம் பாய்ந்து ஓட்டல் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    க.பரமத்தி:

    கேரள மாநிலம், மலப்புரம், சிக்டோடி, பனிகாரா ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம். இவருடைய மகன் முகமது நபி (வயது 23). இவர் க.பரமத்தி அருகே உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 7 மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.

    தீபாவளி பண்டிகையையொட்டி கடையின் முன்புறம் உள்ள இரும்புத்தூணில் மின்விளக்கு கட்டிக்கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து முகமதுநபி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×