search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கரூர் அருகே தூக்குப்போட்டு ஓட்டல் தொழிலாளி தற்கொலை

    கரூர் அருகே தூக்குப்போட்டு ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் வெங்கமேடு பழனியப்பா தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது 28), ஓட்டல் தொழிலாளி. இவருடைய மனைவி கீர்த்திகா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதில் மனமுடைந்து காணப்பட்ட திருப்பதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் திருப்பதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×