search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

    முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையை அடுத்த மேலவாடியகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கீழவாடியகாடு கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் ரகு (வயது23) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுவை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×