search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருத்தணியில் மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது

    திருத்தணியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருத்தணி:

    திருத்தணி வழியாக குட்கா கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவுப்படி கூடுதல் போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் மேற்பார்வையில் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரக்கோணம் புதிய பைபாஸ் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கோதண்டபுரம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன், அன்பரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் அரக்கோணம் பகுதியில் இருந்து திருத்தணி வழியாக நெமிலி கோதண்டபுரம் கிராமத்திற்கு குட்காவை கடத்தி செல்வதாக தெரிவித்து உள்ளனர்.

    அவர்களிடம் இருந்து 40 கிலோ குட்கா மற்றும் 2 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×