search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நெல்லை மாவட்டத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் தற்கொலை

    நெல்லை மாவட்டத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆவரைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சுடலை. இவரது மனைவி லட்சுமி (வயது 75). இவர் கடந்த 13-ந்தேதி தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாங்குநேரி அருகே உள்ள சின்னமூலக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (40). இவர் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதில் மனம் உடைந்த சின்னதுரை நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×