என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரமடை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்13 Oct 2021 9:28 AM GMT (Updated: 13 Oct 2021 9:28 AM GMT)
கோவை மாவட்டம் காரமடை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கண்ணாரபாளையத்தை சேர்ந்தவர் கிட்டப்பன். இவரது மனைவி தனலட்சுமி (வயது 52). கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஓம் சக்தி நகரில் உள்ள தனது சகோதரன் வீட்டிற்கு சென்றார். அப்போது தனலட்சுமி வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், கைசெயின் உள்பட 5½ பவுன் தங்க நகைகள் ரூ. 95 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மறுநாள் வீட்டிற்கு வந்த தனலட்சுமி கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அவர் காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து 5½ பவுன் தங்க நகைகள், ரூ.95 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கண்ணாரபாளையத்தை சேர்ந்தவர் கிட்டப்பன். இவரது மனைவி தனலட்சுமி (வயது 52). கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஓம் சக்தி நகரில் உள்ள தனது சகோதரன் வீட்டிற்கு சென்றார். அப்போது தனலட்சுமி வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், கைசெயின் உள்பட 5½ பவுன் தங்க நகைகள் ரூ. 95 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மறுநாள் வீட்டிற்கு வந்த தனலட்சுமி கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அவர் காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து 5½ பவுன் தங்க நகைகள், ரூ.95 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X