search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    மதுரையில் வீடுகளில் புகுந்து 15 பவுன் நகை திருட்டு

    மதுரையில் வீடுகளில் புகுந்து 15 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 40). அரசு போக்குவரத்து கழக டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு திருமங்கலத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். மர்ம நபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க நகையை திருடிச்சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அருகே உள்ள அய்யனார்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னான் (வயது 49). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.

    மர்ம நபர்கள் மாற்றுச் சாவி போட்டு முன்கதவு பூட்டை திறந்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×