search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரியில் இன்று காலை மழையுடன் கடல் சீற்றமாக காணப்பட்டதை காணலாம்
    X
    கன்னியாகுமரியில் இன்று காலை மழையுடன் கடல் சீற்றமாக காணப்பட்டதை காணலாம்

    கன்னியாகுமரியில் கடல் சீற்றம்- படகு போக்குவரத்து ரத்து

    கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.

    இவற்றை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக படகு போக்குவரத்து நடந்து வருகிறது.

    இன்று காலை வழக்கம் போல் 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதே நேரம் கன்னியாகுமரியில் வானம் மேக மூட்டத்துடன் மப்பும் மந்தாரமாக காட்சியளித்தது. பின்னர் காலை 10 மணியில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல மழையின் வேகமும் அதிகரித்தது. அப்போது கடலில் சீற்றமும் கொந்தளிப்பும் காணப்பட்டது. இதனால் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோ‌ஷமாக வீசின. இதைத் தொடர்ந்து காலை 10-30 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


    Next Story
    ×