search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மேலப்பாளையத்தில் 18 கிலோ புகையிலை பறிமுதல்- 2 பேர் கைது

    மேலப்பாளையத்தில் 18 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பாதுஷா(வயது 52). அதே பகுதியை சேர்ந்தவர் காஜா நிஜாமுதின்(45). இவர்கள் 2 பேரும் தங்களுக்கு சொந்தமான கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் மேலப்பாளையம் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது 18 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×