search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தொப்பூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    தொப்பூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நல்லம்பள்ளி:

    தொப்பூர் அருகே கோணமடுவுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி உஷாராணி (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உஷாராணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். உஷாராணி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 ஆண்டுகளில் உஷாராணி தற்கொலை செய்து கொண்டதால் தர்மபுரி உதவி கலெக்டர் சித்ராவிஜயன் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×