search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது - கார் பறிமுதல்

    பணகுடி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர்.
    பணகுடி:

    பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் பணகுடி தண்டையார்குளம் பிரிவு ரோட்டில் வாகன சோதனை செய்தார். அப்போது வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தார். காரில் 400 மதுபாட்டில்கள் இருந்தது. மதுபாட்டிகளை கடத்திய காவல்கிணறை சேர்ந்த அந்தோணி பிரபு (வயது 44), தனக்கர்குளத்தை சேர்ந்த ரவிந்திரகுமார் (34) ஆகிய 2 பேரையும் கைது செய்தார். 400 மதுபாட்டில்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×