search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 50,923 ஆக அதிகரித்து உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 50 ஆயிரத்து 872 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் இம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 50,876 ஆக அதிகரித்தது. இதற்கிடையே நேற்று புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 923 ஆக அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் நேற்று 49 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடுதிரும்பினர். இதுவரை 49 ஆயிரத்து 873 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 488 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 562 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 3-வது அலையை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×