என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை- வாலிபர்கள் கைது
Byமாலை மலர்6 Oct 2021 7:05 AM GMT (Updated: 6 Oct 2021 7:05 AM GMT)
ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளை, பெற்றோர்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
மதுரை:
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளும் ஆன்-லைனில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஆன்-லைன் மூலம் படிக்கும் சிறுமிகள் மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கி உள்ள பெண்களை குறி வைத்து நண்பர்கள் போல் முதலில் குறுஞ்செய்திகள் பகிர்ந்து பின்னர் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி, இதேபோல அவர்களையும் அனுப்பச் சொல்லி பதிவு செய்து 2 வாலிபர்கள் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வருவதாக எஸ்.எஸ். காலனி போலீசுக்கு புகார் வந்தது.
இதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் குறுஞ்செய்தி ஆபாச படம் அனுப்பியது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் ஆறுமுகம், முத்துமாலை மகன் மகாராஜா என்பது தெரியவந்தது.
இதையடுத்து எஸ்.எஸ். காலனி போலீசார் இரவோடு இரவாக ஸ்ரீவைகுண்டம் சென்றனர். அங்கு வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் அந்த செல்போன்களில் ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது 2 பேரும் 10 வயது முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு ஆபாச வீடியோ போட்டோ அனுப்பி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஆறுமுகம், மகாராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்த எஸ்.எஸ்.காலனி போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளை, பெற்றோர்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். இது போன்ற மோசடி நபர்களிடம் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளும் ஆன்-லைனில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஆன்-லைன் மூலம் படிக்கும் சிறுமிகள் மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கி உள்ள பெண்களை குறி வைத்து நண்பர்கள் போல் முதலில் குறுஞ்செய்திகள் பகிர்ந்து பின்னர் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி, இதேபோல அவர்களையும் அனுப்பச் சொல்லி பதிவு செய்து 2 வாலிபர்கள் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வருவதாக எஸ்.எஸ். காலனி போலீசுக்கு புகார் வந்தது.
இதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் குறுஞ்செய்தி ஆபாச படம் அனுப்பியது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் ஆறுமுகம், முத்துமாலை மகன் மகாராஜா என்பது தெரியவந்தது.
இதையடுத்து எஸ்.எஸ். காலனி போலீசார் இரவோடு இரவாக ஸ்ரீவைகுண்டம் சென்றனர். அங்கு வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் அந்த செல்போன்களில் ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது 2 பேரும் 10 வயது முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு ஆபாச வீடியோ போட்டோ அனுப்பி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஆறுமுகம், மகாராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்த எஸ்.எஸ்.காலனி போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளை, பெற்றோர்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். இது போன்ற மோசடி நபர்களிடம் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X