search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாட்டறம்பள்ளி அருகே போலி டாக்டர் மீண்டும் கைது

    போலி டாக்டர் ஜெயராமனை கைது செய்த போலீசார் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியை சேர்ந்தவர் பூர்வீகமாக கொண்டவர் பெருமாள் என்கிற ஜெயராமன் (வயது 55). இவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு சுமார் 25 வருடத்திற்கும் மேலாக புதுப்பேட்டை ராஜவீதி தெருவில் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார்.

    இவர் கடந்த 2012-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் அவர் மீண்டும் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அறிந்த மருத்துவ அதிகாரிகள் நேற்று காலை போலீசாருடன் சென்று ஜெயராமன் நடத்தி வந்த கிளினிக்கில் சோதனை செய்தனர். அப்போது அவர் சிகிச்சையளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜெயராமனை கையும் களவுமாக பிடித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ஜெயராமனை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
    Next Story
    ×