search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி டாக்டர்"

    • கடந்த ஒரு ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.
    • போலீசார் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டர் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம்பாளையம் ரோட்டில் ஒருவர் உரிய மருத்துவ படிப்பு இல்லாமல் கிளினிக் வைத்து நடத்தி வருவதாக கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரனுக்கு தகவல் வந்தது. பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தகவல் வந்த கிளினிக்கிற்கு விரைந்து சென்றனர். அந்த கிளினிக்கிற்குள் நோயாளிகளை போல போலீசார் நுழைந்தனர். அப்போது தேவராஜ் (வயது 54) என்பவர் அங்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தார். உடனடியாக விரைந்து சென்ற இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் மருத்துவம் பார்த்த தேவராஜிடம் மருத்துவம் படித்தற்கான சான்றிதழை கேட்டனர். அவரிடம் மருத்துவம் படித்தற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிய வந்தது.

    விசாரணையில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து வந்ததும், இந்த கிளினிக்கை நடத்தி வந்த டாக்டர் இறந்ததும், அதன்பின் கடந்த ஒரு ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

    இது குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டர் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் போலி டாக்டர் தேவராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே இந்திலி மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வருவதாக சென்னை பாலின தேவை தடை செய்தல் சட்ட கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி பாலின தேவை தடை செய்தல் சட்ட கண்காணிப்பு குழு துணை சூப்பிரண்டு சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் இந்திலி பகுதியில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் முருகேசன் (வயது 43) பி.பார்ம் படித்துவிட்டு சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் சோதனை செய்த போது கர்ப்பிணிப் பெண்களுக்கு வயிற்றில் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என ஸ்கேன் கருவி மூலம் பரிசோதனை செய்ததும், பெண் சிசுவாக இருந்தால் கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது.இதனையடுத்து அவருடைய வீட்டில் இருந்த 2 சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிள், ஸ்கேன் கருவி, கருக்கலைப்பு மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கருக்கலைப்பு மையத்தை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து சின்னசேலம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் குறளியன் கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், முருகேசனுக்கு உதவியாளராக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சின்னராஜ் (28) என்பவரையும் கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண் குழந்தைகள் வேண்டாம் என்று நினைக்கும் பெற்றோர்கள் கருவிலிருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என கண்டறிந்து சட்டவிரோதமாக செயல்படும் மையங்களில் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர்.

    கருக்கலைப்பு செய்வதால் பாலின விகிதம் குறையும் நிலை உள்ளது. எனவே பாலின சமத்துவத்தை உணர்ந்து ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளும் சாதிக்கலாம் என்பதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. இவ்வாறு அவர் கூறினார்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக நல மருத்துவத்துறை தலைவர் (பொறுப்பு) பொன்னரசு கூறுகையில்,இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிந்து வருகின்றனர். சட்ட விரோதமாக நடைபெறும் கருக்கலைப்பு மையங்களில் 90 சதவீதம் பேர் பெண் சிசுக்கலையும், சுமார் 10 சதவீதம் முறையற்ற உடல் உறவினால் உருவாகும் கருவினையும் கருக்கலைப்பு செய்கின்றனர். கருவில் வளரும் சிசுவிற்கு மருத்துவ ரீதியாக குறைபாடுகள் இருந்தால் அரசு மருத்துவமனைகளிலேயே கருக்கலைப்பு செய்யப்படும்.இவ்வாறு கருக்கலைப்பு செய்யப்படும் பெண்களுக்கு மனநல மருத்துவரால் மன ஆற்றுதல் சிகிச்சையும் வழங்கப்படும். இதனால் அவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால் இது போன்று சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதன் மூலமாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மருத்துவம் கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.

    கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மூத்த வக்கீல் செல்வநாயகம் கூறுகையில்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டு காலங்களில் அதிக அளவில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த குற்றத்தில் கைது செய்யப்படும் நபர்கள் 10 தினங்களில் ஜாமீன் பெற்று வெளியே வந்து விடுகின்றனர். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்.தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே பெண் பிள்ளைகளின் பிறப்பு சதவீதத்தை அதிகப்படுத்த முடியும் என்றும் இல்லையென்றால் அது சமூகத்தின் பெரிய சீர்கேட்டை ஏற்படுத்தும் என கூறினார்.சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்திய முருகேசன் மகள் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார் என்பதும், முருகேசன் இது போன்ற வழக்கில் 4-வது முறையாக கைது செய்யப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • டாக்டராக பணியாற்றிய சித்ரா பிரியதர்ஷினியிடம் மருத்துவம் படிப்பு சான்றிதழ் மற்றும் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை.
    • ஆயுர்வேதம், சித்தா தொடர்பான காலாவதியான மாத்திரைகளும் இருந்தன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வந்த பவானி கணேசன் தனியார் ஆஸ்பத்திரி தமிழ்நாடு மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத்தின்படி நலப்பணிகள் இணை இயக்குனரிடம் உரிமம் பெறவில்லை.

    இங்கு டாக்டராக பணியாற்றிய சித்ரா பிரியதர்ஷினியிடம் மருத்துவம் படிப்பு சான்றிதழ் மற்றும் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை. மேலும் ஆஸ்பத்திரிக்கு தொடர்பு இல்லாத மகப்பேறு மருத்துவத்திற்கான உபகரணங்கள், மாத்திரைகள் இருந்தன. ஆயுர்வேதம், சித்தா தொடர்பான காலாவதியான மாத்திரைகளும் இருந்தன.

    அதனை பறிமுதல் செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஆஸ்பத்திரிக்கு சீல் வைத்தனர். மேலும் மாநகர் நல அலுவலர் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் மற்றும் போலீசார் போலி டாக்டர் சித்ரா பிரியதர்ஷினி மீது மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அமாவாசை தினத்தில் பெண்ணை பூஜைக்கு வருமாறு டாக்டர் அழைத்தார்.
    • பூஜை அறையில் வைத்து பெண்ணை அமர வைத்து பல்வேறு மந்திரங்களை உச்சரித்தார்.

    திருப்பதி:

    சினிமாக்களில் வரும் காமெடி காட்சிகளில் டாக்டர்கள் பல்வேறு விதமாக பணம் பிடுங்குவதும் நூதனமாக சிகிச்சை அளிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    அதை மிஞ்சும் வகையில் ஆந்திராவில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் வெறும் எலுமிச்சம்பழம் மற்றும் சாம்பலை கொடுத்து ரூ.50 ஆயிரம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆந்திர மாநிலம் ஐதராபாத் எல்.பி.நகரில் ஆயுர்வேத டாக்டர் ஒருவர் தனியாக கிளினீக் நடத்தி வருகிறார்.

    இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றார். தனக்கு தலைவலி மற்றும் நரம்பு பகுதிகளில் வலி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    மேலும் ஆயுர்வேத சிகிச்சை பெற விரும்புவதாக டாக்டரை நாடினார். பெண்ணை பரிசோதித்த அந்த டாக்டர் மருந்துகளை பரிந்துரை செய்வதற்கு பதிலாக அந்த பெண்ணிடம் எலுமிச்சம் பழங்களையும் ஒரு சிறிய பையில் சாம்பலையும் கொடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து அமாவாசை தினத்தில் பெண்ணை பூஜைக்கு வருமாறு அழைத்தார். பூஜை அறையில் வைத்து பெண்ணை அமர வைத்து பல்வேறு மந்திரங்களை உச்சரித்தார்.

    அப்போது பூஜை பொருட்கள் என கூறி வீட்டிற்கு வாங்க வேண்டிய மளிகை பொருட்களின் பட்டியலை அந்த பெண்ணிடம் கொடுத்தார்.

    இவற்றையெல்லாம் கொடுத்துவிட்டு அந்த பெண்ணிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் பணத்தை டாக்டர் பறித்துக் கொண்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து அவரது உறவினர்களிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட டாக்டர் மீது இதுவரை எந்தவிதமான புகார்களும் வரவில்லை. எனவே பெண் கூறிய குற்றச்சாட்டுகள் சரிபார்க்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • போலீசில் புகார்
    • கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே மிட்டாளம் பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஒருவர் சிகிச்சை அளிப்பதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் உமராபாத் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் விசா ரணை நடத்தினர்.

    அப்போது மருத்துவ படிப்புமுடிக் காமல் கிளினிக் வைத்து பொதுமக்க ளுக்கு மருத்துவம் பார்த்த வாணியம் பாடியை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவம் படிக்காமல் பொது மக்களுக்கு ஊசி போட்ட போலி டாக்டர் முனியம்மாள் என்பவர் என்பது தெரிந்தது.
    • மருத்துவ அலுவலர் அருண் அ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அருண், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளி மற்றும் மருந்துகள் ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய போலி மருத்துவர் தடுப்பாய்வு குழுவினர் நேற்று அ.பள்ளிப்பட்டியில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கிளினிக்கில் சோதனை செய்தனர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் (வயது 36) என்பவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொது மக்களுக்கு ஊசி போட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அவர் போலி டாக்டர் என்பது தெரிந்தது.

    இதையடுத்து கிளினிக்கில் இருந்து ஆங்கில மருந்துகள், மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது குறித்து மருத்துவ அலுவலர் அருண்

    அ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ்

    சப்-இன்ஸ்பெக்டர் கெய்க்வாட் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் முனியம்மாளை கைது செய்தார்.

    • அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சாமிநாதனுக்கு புகார்கள் வந்துள்ளது.
    • மருந்தகம் நடத்தி நோயாளிகளுக்கு மருந்துகளை விற்று வந்ததும் தெரியவந்தது.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு நோயாளிகளுக்கு போலி டாக்டர் மருத்துவம் பார்த்து வருவதாக விருத்தாசலம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சாமிநாதனுக்கு புகார்கள் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் சாமிநாதன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள சங்கர் (வயது52) என்பவரிடம் சோதனை நடத்தினர். சோதனையில் அவர் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு அந்த பகுதியில் பொதுமக்களுக்கு சில வருடங்களாக மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் மருந்தகம் நடத்தி நோயாளிகளுக்கு மருந்துகளை விற்று வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் சங்கரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரமணன் கொத்தட்டை பகுதியில் ஆண்டவர் என்ற பெயரில் மெடிக்கல் நடத்தி வருகிறார்.
    • ரமணன் மெடிக்கலுக்கு சென்று சோதனை செய்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி சின்னகுமட்டி பகுதியை சேர்ந்தவர் ரமணன் (வயது 39). இவர் கொத்தட்டை பகுதியில் ஆண்டவர் என்ற பெயரில் மெடிக்கல் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 6-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் தனசேகர் (23) காய்ச்சலுக்காக ரமணன் மெடிக்கலுக்கு வந்து அவரிடம் மருந்து மற்றும் ஊசி போட்டுள்ளார். இதனையடுத்து தனசேகருக்கு மேலும் உடல் நலம் மோசமாகி கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தனசேகரனின் தாய் தமிழ்ச்செல்வி என் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை வட்டார அலுவலர் அமுதா சின்னகுமட்டி பகுதியில் உள்ள ரமணன் மெடிக்கலுக்கு சென்று சோதனை செய்தார். அப்போது அவர் மருத்துவர் சீட்டு இல்லாமல் நோயாளிகளுக்கு மருந்து வழங்கியது தெரியவந்தது.

    உடனே இதுகுறித்து வட்டார அலுவலர் அமுதா பரங்கிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் ரமணன் மருத்துவ படிப்பு படிக்காமலும், மருத்துவர் சீட்டு இல்லாமலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருந்துவம் பார்த்தது தெரியவந்தது. உடனே போலீசார் ரமணன் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மருத்துவம் படிக்காமல் மருந்து மற்றும் ஊசி போட்ட போலி டாக்டரால் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

    • அதிகாரிகள் சோதனையில் சிக்கினார்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் வள்ளி (வயது 45). இவர் மருத்துவ படிப்பு படிக்காமல் அப்பகுதியில் மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதார துறை அதிகாரி களுக்கு புகார்கள் வந்தன.

    அதன் பேரில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் விஜயா முரளி தலைமையில் அதிகாரிகள், வள்ளி வீட்டில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது வள்ளியின் வீட்டில் ஆங்கில மருத்துவத்திற்கான மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இருப்பதும், இவர் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்பட பல்வேறு வியாதி களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

    இதே தொடர்ந்து அதிகாரிகள் ராணிப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டரான வள்ளியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதே போல் வாலாஜா ஒத்தவாடை தெருவில் போலி மருத்துவம் பார்க்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு பரத் (25) என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.

    சோதனையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த அறையை பூட்டி சீல் வைத்தனர்.

    • ஜெய்சக்தி நேச்சுரல் க்யூர் சென்டர் என்ற அக்குபஞ்சர் சிகிச்சை மையத்திற்கு நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    • அக்குபஞ்சர் மருத்துவம் படிக்காமல் உரிய தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதியானது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வலசுபாளையத்தில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த "ஜெய்சக்தி நேச்சுரல் க்யூர் சென்டர்" என்ற அக்குபஞ்சர் சிகிச்சை மையத்திற்கு நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    இந்தநிலையில் அங்கு சிகிச்சை பார்த்து வந்த அருள் என்பவரிடம் திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடத்திய விசாரணையில் அவர் அக்குபஞ்சர் மருத்துவம் படிக்காமல் உரிய தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதியானது.

    இதனைதொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கனகராணி அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் அருள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

    • மருத்துவம் படிக்காமல் டாக்டராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.
    • சந்திரசேகரன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ஈச்சம்பாடி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது42). இவர் 10-ம் வகுப்பு படித்து முடித்து தனியார் மருத்துவமனை நடத்தி வருவதாக புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் அரூர் அரசு மருத்துவ அலுவலர் அருண்பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சந்திரசேகரன் மருத்துவம் படிக்காமல் டாக்டராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அரூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் சந்திரசேகரன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்.

    கோவை:

    குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஹரேந்திரன் என்ற எர்வின் எவின்ஸ் (வயது49). இவர் ஓமியோபதி டாக்டர் எனக் கூறி கோவை வெள்ளலூர் ராமசாமி கோனார் நகரில் உள்ள தங்கராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தலையோலபறம்பு போலீசார் கொள்ளை வழக்கு தொடர்பாக எர்வினை கைது செய்து அழைத்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் தங்கராஜ், கைதான எர்வின் எவின்ஸ் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.

    சோதனையின் போது வீட்டில் போலி தங்க கட்டிகள், மற்றும் ஒரு புறம் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், மற்றும் 3 ரப்பர் ஸ்டாம்பு, ஒரு துப்பாக்கி (ஏர்கன்) ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு எர்வின் எவின்ஸ் வாடகைக்கு வந்தார். அவரிடம் உங்களது மனைவி, குழந்தைகள் எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்னர் வருவார்கள் என்று கூறினார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை காணவில்லை என என்னிடம் கேட்டார். அதற்கு நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியது தானே என்றேன்.

    அதற்கு அவர் வேண்டாம் என கூறிவிட்டார். மேலும் வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதனையடுத்து போத்தனூர் போலீசார் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட போலி தங்க கட்டிகள் துப்பாக்கி ஒரு பக்கம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எர்வினுக்கு எப்படி வந்தது? என விசாரித்து வருகிறார்கள். எர்வின் போலி டாக்டராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ள அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    ×