என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போலி பெண் டாக்டர் கைது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் வள்ளி (வயது 45). இவர் மருத்துவ படிப்பு படிக்காமல் அப்பகுதியில் மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதார துறை அதிகாரி களுக்கு புகார்கள் வந்தன.
அதன் பேரில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் விஜயா முரளி தலைமையில் அதிகாரிகள், வள்ளி வீட்டில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது வள்ளியின் வீட்டில் ஆங்கில மருத்துவத்திற்கான மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இருப்பதும், இவர் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்பட பல்வேறு வியாதி களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
இதே தொடர்ந்து அதிகாரிகள் ராணிப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டரான வள்ளியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இதே போல் வாலாஜா ஒத்தவாடை தெருவில் போலி மருத்துவம் பார்க்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு பரத் (25) என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.
சோதனையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த அறையை பூட்டி சீல் வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்