search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வந்தவாசியில் போலி டாக்டர் கைது
    X

    வந்தவாசியில் போலி டாக்டர் கைது

    • 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்தார்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி காதர்ஜண்டா தெருவில் போலி டாக்டர் ஒருவர் கிளினிக் வைத்து மூல நோய்க்கு சிகிச்சை அளிப்ப தாக புகார்கள் வந்தன.

    இதை யடுத்து வந்தவாசி அரசு மருத் துவமனை தலைமை மருத் துவ அலுவலர் சிவப்பிரியா தலைமையிலான மருத்துவத் துறையினர் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட னர்.

    இதில் வந்தவாசி கஸ்தூரி பாய் தெருவைச் சேர்ந்த ரிஷி காந்த்ராய் மகன் அனந்தகு மார்ராய் (வயது 42) என்பவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு கிளினிக் வைத்து மூல நோய்க்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. இதைய டுத்து அவரிடமிருந்து மருத் துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்த னர்.

    இதுகுறித்து மருத்துவ அலு வலர் சிவப்பிரியா வந்தவாசி தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனந்தகுமார்ராயை கைது செய்தனர்.

    மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×