என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காந்தி பிறந்தநாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி- தமிழக அரசு அறிவிப்பு
Byமாலை மலர்25 Sep 2021 5:09 AM GMT (Updated: 25 Sep 2021 6:49 AM GMT)
பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
அதற்கிணங்க மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளில் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது.
போட்டித்தலைப்புகள் போட்டி நடைபெறும் நாளன்று அறிவிக்கப்பெறும். போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும்.
பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை அந்தந்த கல்லூரி முதல்வரே 2 பேர் வீதம் தெரிவு செய்து போட்டிக்கு அனுப்பப் பெறவேண்டும். அதே போன்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்களே 2 பேர் வீதம் தெரிவு செய்து போட்டிக்கு அனுப்பப் பெற வேண்டும்.
பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் 1. முதல் பரிசு ரூ.5000, 2. இரண்டாம் பரிசு ரூ.3000, 3. மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வகையில் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி முற்பகல் 10 மணிமுதல் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பிற்பகல் 2 மணிமுதல் நடைபெறும்.
மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களிலிருந்து மட்டும் மாவட்டத்திற்கு இருவரை தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000 வீதம் 2 பேருக்கு தனியே வழங்கப்பெறும்.
கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெறும் இடம் அந்தந்த மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர், உதவி இயக்குநர் வாயிலாகவும் அறிவிக்கப் பெறும்.
மேலும் அரசு அறிவித்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பான வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி போட்டிகள் நடத்தப்பெறும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022 -ம் ஆண்டு மானியக்கோரிக்கை அறிவிப்பில் “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கருத்துக்களையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் சேர்க்கும் வண்ணம் ஆண்டுதோறும் அவர்களது பிறந்தநாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டிகள் நடத்திப்பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதற்கிணங்க மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளில் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது.
போட்டித்தலைப்புகள் போட்டி நடைபெறும் நாளன்று அறிவிக்கப்பெறும். போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும்.
பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை அந்தந்த கல்லூரி முதல்வரே 2 பேர் வீதம் தெரிவு செய்து போட்டிக்கு அனுப்பப் பெறவேண்டும். அதே போன்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்களே 2 பேர் வீதம் தெரிவு செய்து போட்டிக்கு அனுப்பப் பெற வேண்டும்.
பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் 1. முதல் பரிசு ரூ.5000, 2. இரண்டாம் பரிசு ரூ.3000, 3. மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வகையில் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி முற்பகல் 10 மணிமுதல் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பிற்பகல் 2 மணிமுதல் நடைபெறும்.
மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களிலிருந்து மட்டும் மாவட்டத்திற்கு இருவரை தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000 வீதம் 2 பேருக்கு தனியே வழங்கப்பெறும்.
கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெறும் இடம் அந்தந்த மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர், உதவி இயக்குநர் வாயிலாகவும் அறிவிக்கப் பெறும்.
மேலும் அரசு அறிவித்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பான வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி போட்டிகள் நடத்தப்பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...சென்னையில் நாளை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X