search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குழந்தை பெற்ற சிறுமி- போக்சோவில் வாலிபர் கைது

    சேலம் அருகே 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததையடுத்து வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    சேலம்:

    சேலம் கருப்பூர் தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் ராஜா (வயது 25). இவர் அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்தார். பின்னர் அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

    இதையடுத்து அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுபற்றி அந்த பகுதியினர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் ராஜாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×